×

நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார்: தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உள்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு..!!

சென்னை: நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உள்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நடிகை கவுதமி தான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை எல்லாம் சொத்துக்களாக வாங்கி வைத்துள்ளார். இவர், தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, பவர் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி, பாஜகவைச் சேர்ந்த கோட்டையூர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியாக விற்றுவிட்டதாக, கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், கோட்டையூரில் நடிகை கவுதமிக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அழகப்பன் மோசடி செய்து அபகரித்து விட்டதாக வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். 6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஆஜராகவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான 5 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அண்மையில் அழகப்பனின் காரைக்குடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு 11 அறைகளுக்கு போலீஸ் சீல் வைத்தது. கோட்டையூரில் உள்ள அழகப்பனின் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜான்விக்டர் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, தலைமறைவாக இருக்கும் அழக்கப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

The post நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார்: தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உள்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Gautami ,Chennai ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...